பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


September 1, 2013

நிஜமாவே பேய் இருக்கா? இல்லையா?

























சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம். சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
பேய் என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம் வெள்ளை புகை போல கால்களின்றி. இந்த கற்பனை உருவம் ஓவியர்கள் புகையிலிருந்து உருவாக்கியது. காரணம் இறந்தவர்களின் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ ஒன்று பிரிந்து போவதாக நினைப்பது. அமைதி கிடைக்காத ஆத்மா பேயாக அங்குமிங்கும் அலைவது போன்ற கருத்து தான்.
ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.
அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது, கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது, காதில்லை. நம்மைத் தாக்க முடியாது, ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை , காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.
இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.
ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.
சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.
முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.
பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.
உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல், ஆவேசமாக அட்டகாசம் புரிதல், அசுர பலத்துடன் செயல்படுதல், எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல், தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றிருப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.
இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். நிலவில் பாட்டி நூல் நூற்பதை கண்டுபிடித்த நமக்கு மரத்தின் நிழல் பேயாக தெரிவதில் என்ன அதிசயம். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காரணம். எங்கேயாவது ஒரு பேய் புரளி கிளம்பி விட்டால் ஆளாளுக்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து கதை சொல்வார்கள். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது. ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால் குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.
எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.
சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே
இனி தைரியமாக இருட்டில் போவீர்கள் தானே. பேய் போகும் போது குடம் உடைத்து விட்டு போகுமாம் அது போல உங்களுக்கு பேய் பயம் தீர்ந்தால் தைரியமாக தமிழ்ஷில் குத்திவிட்டு போங்கள்.

வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்





பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால்சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர்அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.
அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.
நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.
தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்



நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய்,நீரிழிவு நோய்,diabetes என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைபிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
நீரிழிவின் வகைகள்
  • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
  • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
  • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)
டைப் I நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
  • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
  • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
  • உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.
டைப் II நீரழிவு நோய்

இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.
டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
  • பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
  • பொதுவாக இது பரம்பரை நோய்
  • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

 இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.
ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 தவிடு நீக்காத அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சிகிச்சைஇதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும் . கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை "சுய கட்டுப்பாடுடன்" கடைப்பிடித்தால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்.

சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?
காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்.இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.
இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வெந்தயப் பொடியை உட்கொண்டும், நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.
 சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

ATM - அமெரிக்காவுல இப்படிதானாம்..!!
















டிஸ்கி : Imported from America..

ஒரு Bank புதுசா ஒரு
Drive-in ATM Open பண்றாங்க..

ஆனா ஆரம்பத்தில மக்கள்
அதை Use பண்ண கொஞ்சம்
ரொம்ப சிரமப்படறாங்க..,

So., அந்த Bank-காரங்க ஒரு மாசம்
Close-ஆ Watch பண்ணி.,
அதை எப்படி Use பண்ணனும்னு
Instructions எழுதி வெக்கிறாங்க..

For Men :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. கார் Window-ஐ கீழே இறக்குங்க..

3. ATM-ல Card-ஐ Insert பண்ணி.,
PIN நம்பரை Enter பண்ணுங்க..

4. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

5. Machine-ல இருந்து Card, Cash, Receipt
எடுத்துக்கோங்க..

6. கார் Window-ஐ ஏத்திக்கோங்க..

7. காரை Start பண்ணி கிளம்புங்க..

For Women :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. ப்ளீஸ் கொஞ்சம் Reverse வாங்க..

3. Safety-க்கு Hand Brake போட்டுக்கோங்க..

4. " அப்புறம் பேசறேன்னு " சொல்லி
Cell Phone-ஐ கட் பண்ணுங்க..

5. Hand Bag எங்கே இருக்குன்னு தேடுங்க..

6. அதுல இருக்கிற Makeup Things-ஐ எல்லாம்
வெளியே எடுத்துட்டு., ATM Card-ஐ கண்டுபிடிங்க..

7. Card-ஐ ATM-ல Insert பண்ணுங்க..

8. கதவு திறந்து முயற்சி பண்ணுங்க..,
Machine தூரமா இருக்குல்ல..

9. Card-ஐ நேரா திருப்பி வெச்சி மறுபடியும்
Insert பண்ணுங்க..

10. Handbag-ல இருக்கிற உங்க டைரிய
தேடி எடுங்க..

11. அந்த டைரில கடைசி பக்கத்தில எழுதி
வெச்சிருக்கிற PIN Number-ஐ பாருங்க..

12. PIN நம்பரை Enter பண்ணுங்க..

13. Cancel பண்ணுங்க., Correct-ஆ மறுபடியும்
Enter பண்ணுங்க..

14. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

15. Car கண்ணாடியில Lips Stick-ஐ சரி பண்ணிக்கோங்க...

16. ATM-ல இருந்து Cash, Receipt எடுத்துக்கோங்க..

17. Cash-ஐ Handbag-ல வைங்க..

18. Makeup-ஐ ஒரு தடவை Check பண்ணிக்கோங்க..

19. காரை Start பண்ணி ரெண்டு அடி முன்னாடி விடுங்க..

20. Reverse வாங்க..

21. ATM Machine-ல இருந்து Card-ஐ எடுங்க.

22. உங்களுக்கு பின்னாடி வெறுத்து போயி
நிக்கிற அந்த ஆளை கேவலமா ஒரு Look விடுங்க..

23. Cell Phone-ஐ Redial பண்ணி பேச்சை
Continue பண்ணுங்க..

24. ம்ம்.. வந்த வேலை Easy-ஆ முடிஞ்சது.,
இப்ப நீங்க கிளம்புங்க..

25. 2 Kms போனவுடனே மறக்காம
Hand Brake Release பண்ணிக்கோங்க..


PIN குறிப்பு :

என்ன துணிச்சல் இருந்தா பொண்ணுங்கள
இப்படி கிண்டல் பண்ணுவாங்க
இந்த Americans..

இதையெல்லாம் பார்த்திட்டு வெங்கட்
சும்மா இருப்பான்னு நினைச்சாங்களா..??!!

ஐ.நா.சபையில சொல்லி OBAMA மேல
ஈவ் டீசிங் கேஸ் போடலாமா..??














.

சிம்.., சிம்.., புது சிம்..!!!

















நானும் என் Friend சுரேஷூம்
Videocon Sim வாங்கலாம்னு
Videocon Showroom போனோம்..

Videocon-ல எக்கச்சக்க Offers..

( * Rs 65 RC-க்கு - Rs 105 Talktime..

* Rs 149 RC-க்கு - Daily 30 Mins Free to any Network
+ 30 Mins Free to any Videocon / 30 Days

* Rs 399 RC-க்கு - 3000 Mins Free to any Network
including Landline / 30 Days )

நாங்க ஆளுக்கொரு நம்பர் Choose
பண்ணிட்டோம்..

அங்கே இருந்த பொண்ணு
எங்க நம்பரை Activate பண்ண
இன்னும் 2 மணி நேரம் ஆகும்னு
சொல்லிட்டு எங்க Application-ஐ Fill
பண்ண ஆரம்பிச்சாங்க..

முதல்ல சுரேஷ்க்கு..,
அப்புறம் எனக்கு..

எனக்கு Fill பண்ணும் போது..
Name கேட்டாங்க - சொன்னேன்.
Address கேட்டாங்க - சொன்னேன்.

அப்புறம்..... இன்னொரு கேள்வி
கேட்டாங்க பாருங்க..

" சார் உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா..? "

" ஹி., ஹி., ஹி.. ஏங்க என்னை
பாத்தா கல்யாணம் ஆகாத
சின்ன பையன் மாதிரியா தெரியுது..? "

அவங்களும் லைட்டா சிரிச்சிச்சிட்டு..
" Married "-ன்னு டிக் பண்ணிட்டு
அவங்க டேபிள்க்கு போயிட்டாங்க..

எனக்கோ செம சந்தோஷம்..!!

இந்த சந்தோஷத்தை கொண்டாடணுமே..!!

பக்கத்தில நின்னுட்டு இருந்த
சுரேஷை கொஞ்சம் வெறுப்பேத்தினா
என்னன்னு தோணிச்சு..

உடனே அவன் பக்கம் பந்தாவா
திரும்பி.....

" அந்த பொண்ணு என்னை பாத்து
கல்யாணம் ஆயிடுச்சான்னு..? "
கேட்டாங்க கவனிச்சல்ல..

" கவனிச்சேன்., கவனிச்சேன்...!!
உனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகுதுன்னு சந்தேகத்துல
கேட்டாங்களோ என்னவோ..?!! "

" ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த
கொலைவெறி.....??!! "

( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......)

வாவ்.. What a Confidence..!!


















ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு
ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு
இலவச விமான பயணத்துக்கு
அரேஞ்ஜ் பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்கு
அது முதல் விமான பயணம்.

So., பல கற்பனைகளோட
அவங்க Plane-ல ஏறி உக்காந்து
இருக்க..

" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! )

" உங்களுக்கெல்லாம் இந்த Trip
ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

( அப்படியா..?!! )

" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு
ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........

இந்த Plane............

முழுக்க முழுக்க......

உங்க Students தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்..
எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும்
ஒரே ஒருத்தர் மட்டும்
கொஞ்சமும் அலட்டிக்கல..
தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல
பறக்க உங்களுக்கு பயமா
இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல
அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே
ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!






1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
Wife Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..

உடனே நல்ல டாக்டரா போயி
பார்க்கிறது Better.

August 25, 2013

சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.


இயற்கை உணவு உலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட சுகர்மருந்து சாப்பிட்டு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் நல்ல பயன்அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நமக்கு இமெயிலில் வரும் சில அடிப்படையான கேள்விகள் பற்றி பார்ப்போம்.
கேள்வி : சுகர் மருந்து கேட்டு இமெயில் அனுப்பி பல நாட்கள் ஆகிறது இன்னும் மருந்து பற்றிய இமெயில் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் ?
பதில் : நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் பதில் அனுப்ப முடிகிறது. முடிந்தவரை வேகமாக பதில் அனுப்ப முயற்சிக்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நேரங்களில் பதில் அனுப்ப சில வாரங்கள் அல்லது 1 மாதம் கூட ஆகும். தாமதம் ஆனாலும் கண்டிப்பாக  உங்கள் இமெயிலுக்கு சுகர் மருந்து வந்து சேரும்.
கே : சுகர் மருந்து எடுத்து சுகரின் அளவு குறைந்துவிட்டது தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டுமா ? மொத்தமாக எவ்வளவு நாள் சுகர் மருந்து எடுக்க வேண்டும் ?
பதில் : சுகர் மருந்து நம் ” தாய் மருந்து “ எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து. வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம். சுகர் இருப்பவர் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சுகர் மருந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி மேம்படும், வயிறு , வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். அதனால் குறிப்பிட்ட காலம் வரை தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் தொடர்ந்து சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிடுவதால் கை, கால் வலி, உளைச்சல் மற்றும் சுகரினால் ஏற்படும் காயங்கள் புண்கள் கூட விரைவில் ஆறிவிடும்.
கே : எனக்கு சுகர் 150 இருகிறது நான் எத்தனை ஸ்பூன் சுகர் பொடி எடுத்துக்கொள்ள வேண்டும் ?
பதில் : 150-ல் இருந்து 250 வரை உள்ளவர் காலை 1 ஸ்பூன் மட்டும் சுகர் மருந்து சாப்பிட்டால் போதும். 250-க்கும் மேல் சுகர் உள்ளவர்கள் காலை 1 ஸ்பூன் மற்றும் இரவு படுக்கும் முன் 1ஸ்பூன் சாப்பிடலாம். 350க்கும் மேல் உள்ளவர்கள் காலை 2 ஸ்பூன் இரவு 2ஸ்பூன் சாப்பிடலாம்.
கே : சுகர் மருந்து சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ?
பதில் : சுகர் மருந்து சாப்பிடும் போது தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம் தப்பில்லை.
கே: 1 வாரம் சுகர் மருந்து எடுத்தேன் ஆனாலும் சுகரின் குறையவில்லையே என்ன காரணம் ?
பதில் : குறைந்த பட்சம் 10 நாள் சுகர் மருந்து எடுத்து அதன் பின் மருத்து சுகர் பரிசோதித்துப்பாருங்கள் சுகரின் அளவு குறைந்திருந்தால் தொடர்ந்து சாப்பிடுங்கள். சில நேரங்களில் மருத்துவமனையை மாற்றிக் கூட சுகரின் அளவை சோதித்துப்பாருங்கள். மருந்து எடுத்துக்கொண்ட பத்து நாள் உங்கள் உடலில் கை , கால் வலி எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள் . எல்லாம் எடுத்தும் சுகரின் அளவு குறையவில்லை என்றால் தாங்கள் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
கே: சுகர் மருந்து எங்கு கிடைக்கும் ? செய்முறையும் தெரியப்படுத்துவீர்களா ?
பதில் : எல்லா மளிகைக்கடைகளிலும் சுகருக்கான மருந்தின் மூலப்பொருட்கள் கிடைக்கும். இமெயிலில் மருந்து தெரியப்படுத்தும்போதே செய்முறையும் சேர்த்தே தெரியப்படுத்தப்படும். தாங்களே சுகர் மருந்து செய்து சாப்பிடலாம்.
கே : தாங்கள் தெரியப்படுத்திய சுகர் மருந்து கிடைத்தது நல்ல பலனும் அடைந்தோம் எங்கள் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் எங்களால் சுகர் மருந்து செய்து சாப்பிட முடியவில்லை உங்களுக்கு தெரிந்த யாராவது இம்மருந்தை செய்து கொடுப்பதாக இருந்தால் அவர்களைப்பற்றிய விபரங்கள் கொடுக்கலாமா ?
பதில் : சென்னை மற்றும் வெளியூர்களில் வாழும் பல நண்பர்கள் இந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். மளிகைக்கடையில் சென்று பொருட்கள் வாங்கி அதை வறுத்து பொடி செய்து சாப்பிட வேண்டியது தான் என்றாலும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதையும் புரியும்படி தெரியப்படுத்தியிருந்தனர். யாரிடம் சுகர் மருந்து செய்ய கொடுக்கலாம் என்று யோசித்தபோது கடந்த 3 வருடத்திற்கு முன் நம் வலைப்பூவின் வாசகர்களில் ஒருவர் தன் நண்பருக்கு சுகர் மருந்து எடுத்து குணம் கிடைத்தது என்பதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் இவரின்  நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டத்திற்கு இவரே சுகர் மருந்து செய்து கொடுத்துள்ளார். சில மாதங்களிலே அவர் பணத்தாசை இல்லாத மனிதர் என்று தெரிந்து கொண்டு அவரிடம் சுகர்  மருந்து தாங்கள் செய்து கொடுக்கலாமா என்று கேட்டோம். தாராளமாக செய்து கொடுக்கிறோம் என்று கூறிய பின் அவரின் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தி இவரிடம் தொடர்பு கொண்டு  மருந்து பொடியாகவே வாங்கிக்கொள்லலாம் என்று கூறினோம். 30 ஸ்பூன் கொண்ட மருந்து பொடி கூரியர் கட்டணமும் சேர்த்து ரூ.200 ஆகிறது என்றார். மருந்து பொடி வாங்கிய பலரிடம் மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம் அதற்கு அவர்கள் மருந்து நன்றாக வேலை செய்கிறது. அத்துடன் 30 ஸ்பூன் மருந்து என்று தான் கூறினார் ஆனால் 40 ஸ்பூன் வரை வருகிறது என்றார். இதிலிருந்தே அவர் குணம் நமக்கு தெரிந்துவிட்டது. இப்போது இவர் நம்  இயற்கை உணவு உலக வாசகர்களில் பலபேருக்கு சுகர் மருந்து பொடி அனுப்புகிறார். விருப்பம்  உள்ள நபர்கள் இந்த 91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சுகர் மருந்து  பொடியாகவே வாங்கிக்கொள்ளலாம்.

August 20, 2013

பகுதி நேரத்தில் சம்பாதிக்க


வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  

இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 

சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்(எப்படியும் படிச்சே ஆகணும் ஹிஹி)

1. TICKET BOOKING 


டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.
TRAIN : ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.
சேவை தளங்கள்:

1 . IRCTC - www.irctc.co.in


IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.
இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS


பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள் TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

3.CINEMA TICKET


சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள்
1.WWW.TICKETNEW.COM

2. WWW.SHANTICINEMAS.COM

3.WWW.THECINEMA.IN   

2.BILL PAYMENT


இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.
சேவை துறைகள்:

►INSURANCE

►TELEPHONE BILL

►ELECTRICITY BILL


இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. அரசு இணையதள  
முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.

அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:
கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது

 MOBILE RECHARGE, 

DTH RECHARGE, 

BUS RESERVATION, 

TRAIN RESERVATION, 

FLIGHTS RESERVATION, 

TELEPHONE BILL  

போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை


►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN

►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM

►ITZCASH               - WWW.ITZCASH.COM

►ICASHCARD          -WWW.ICASHCARD.IN

►BEAM                    -WWW.BEAM.CO.IN


இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.


பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:


►TICKET GOOSE  - WWW.TICKETGOOSE.COM

►REDBUS             - WWW.REDBUS.IN


TRAIN, FLIGHT 

இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:


1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்)

3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.


May 16, 2013

கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய?


கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும்.

ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை.

அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில்தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும். சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

• அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்துவது என்பது தவறில்லை. ஆனால் அத்தகைய அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்துவது தான் தவறானது. உண்மையில் காதல் செய்யும் எவரும், அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்த மாட்டார்கள். அன்பு என்பது ஒருவரது மனதில் இருந்தால், போதுமானது. அத்தகைய அன்பை மற்றவர் பார்க்கும் வகையில் பொது இடங்களில் வெளிப்படுத்துவது போலியான உறவைக் குறிக்கும்.

• உண்மையான உறவில் ஆலோசனைகள் இருக்கும். அவ்வாறு ஆலோசனை செய்யும் போது இருவரும் ஒவ்வொரு புள்ளியிலிருந்து யோசித்து பேசுவோம். ஆனால் விவாதமானது எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேலைபற்றியோ இல்லாமல், வெறும் கூந்தல், ஆடை போன்றவற்றைப் பற்றியே இருந்தால், அது உறவை போலியானது என்று காட்டும்.

• துணையின் விருப்பமான படம், ரெசிபி, நிறம் மற்றும் மறக்க முடியாத நிகழ்வு போன்றவை தெரியுமா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் இருந்தால், அவர்/அவள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை யென்றும், மேலும் அது உண்மையான அன்பு இல்லை என்றும் தெரிவிக்கிறது.

• சண்டைகள் மற்றும் வாதங்கள் இருந்தால் தான், உறவு நன்கு வலுவாக இருக்கும். ஆனால அத்தகையது எதுவும் இல்லாமல் எந்நேரமும் சாதாரணமாக இருந்தால், அது வாழ்வில் சுவாரஸ்யத்தை குறைந்து, உறவை போலியானது போல் காட்டும்.

• எந்த ஒரு நட்போ அல்லது காதலோ கிடைத்தாலும், முதலில் அவர்களது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் போலியான உறவு இருந்தால், அத்தகையவர்களை சந்திக்க விருப்பமில்லாமல், அடிக்கடி வேலை உள்ளது என்று ஓடி விடுவார்கள்

• துணையாக இருப்பவர்கள் இரகசியத்தை மறைப்பது, அவர்களது கண்களில் நன்கு தெரியும். உண்மையான உறவில் இரகசியங்கள் என்ற ஒன்று இருந்தால், அதுவும் போலியானது தான். எப்போதும் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

நெருக்கமானது, அவர்கள் மனம் வருந்தும் போது, சமாதானப்படுத்துவதற்கு நெருக்கமானது வேண்டும். ஆனால் அது சுத்தமாக இல்லாவிட்டால், பின் அது நிச்சயம் உண்மையான உறவாக இருக்க முடியாது.

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று!

May 2, 2013

100 நாட்கள் துவைக்காமல் அயர்ன் பண்ணாமல் போடக் கூடிய சட்டை! -வீடியோ இணைப்பு


அமெரிக்க நிறுவனமொன்று 100 நாட்களுக்கு மேல் துவைக்காமலும் அயர்ன் செய்யாமலும் பயன்படுத்தக் கூடிய சட்டையை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சட்டையை அணிந்திருந்தாலும் இது கொஞ்சமும் அழுக்கடையாமல் அதே பளிச்-சில் இருக்கும் என வூல் அன்ட் பிரின்ஸ் எனும் சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறுகிறது. அதாவது சுருங்காத தன்மையுடைய நூலினால் இந்த ச்ட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால் அதை நீண்ட நாட்கள் அயர்ன் செய்யத் தேவையே இல்லையாம்.கடினமான உடற்பயிற்சிக்குப் பிறகு கூட இந்தச் சட்டை தூய்மையாக,அதே நறுமணத்தோடு இருக்குமாம்.


2 m - 100 days shirt
அந்தீஸ் மலையேறிகள் முதல் நியூயார்க் இரவு விடுதிகளில் நடனமாடுபவர்கள் வரை பல்வேறு தரப்பினரிடம் இந்த ச்ட்டை சேம்பிள் ஒன்றை கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டதாகவும் அப்படி சட்டையை சோதிப்பதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள், சட்டையைப் பற்றி கூறும் போது, ‘சட்டை எப்போதும் ட்ரைகிளீனரில் இருந்து எடுக்கப்பட்டது போல் புத்துணர்ச்சியோடு இருக்கிறது’ என புகழ்ந்து தள்ளியுள்ளதாகவும் கூறியுள்ளார்களாம்..
கம்பளியினாலான இந்த ச்ட்டை பருத்தி ஆடைகளை விட 6 மடங்கு அதிக காலம் பயன்படுத்தக்கூடியது.தற்போது மேற்படி நிறுவனத்தின் ஆய்வாளர்களுக்கு மட்டும் 100 டாலர்(ஐயாயிரம் ரூபாய்) விலைக்கு இந் ச்ட்டை விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் மார்கெட் விற்பனை செய்யப்படவுள்ள சட்டைகளின் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லையாம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் அந்த பாலே விஷமாகி விடுமாம்!




கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.


2 m - ndian-mother-breastfeeding-
கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

April 13, 2013

ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?




நீங்க எல்லாரும் தினந்தினம் எத்தனையோ பேரை கடுப்பேத்தியிருப்பீங்க இல்லா எத்தனையோ பேரால நீங்க கடுப்பாயிருப்பீங்க.அப்போ உங்க நிலைமையையும் அவங்க நிலைமையையும் ஒருக்கா நினைச்சு பாருங்க.உங்களில ஒரு சிலர் மற்றவங்கள எப்பிடி கடுப்பேத்தலாமெண்டு ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க.ஒருத்தரை கடுப்பேத்துறதென்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்ல.அதுக்காக நீங்க நேரமெல்லாம் செலவழிக்க தேவையில்ல.ரொம்ப சுலபம்.இதெல்லாம் எனக்கெப்பிடி தெரியும்னு நினைக்கிறீங்களா?எல்லாம் ஒரு அனுபவம்தான்.வேணுமென்றால் நீங்க கூட முயற்சி பண்ணி பார்க்கலாம்.

என்னோட அனுபவத்தில கொஞ்சம் சொல்றேன்.உங்களுக்கும் ஏதாச்சும் புது ஐடியா இருந்தா பகிர்ந்து கொள்ளுங்க . 

  • வீதியில கண்டால் தெரியாத மாதிரி போயிடுங்க.கேட்டால் நான் வேற யோசனையில போட்டன் கவனிக்கல எண்டு சொல்லிடுங்க.
  • வேறு ஒருத்தருக்கு நீங்க அனுப்பிய மெசேஜ்சினை அவருக்கு அனுப்பலாம்.கேட்டால் மாறி அனுப்பீற்றன் என்று சொல்லலாம்.
  • ஒருத்தர் call பண்ணினா நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லிற்று cut பண்ணிக்கலாம்.ஆனா கடைசி வரைக்கும் call பண்ணக்கூடாது.
  • மறுபடி மறுபடி call பண்ணினாங்கன்ன அவங்க நம்பர்களை call block பண்ணி விட்டுக்கலாம்.
  • அவங்க call மட்டும் தவிர்த்திட்டு நாம வேற call பேசிற்று இருந்தோம்னா call waiting cancel பண்ணிக்கலாம்.
  • மெசேஜ் அனுப்பினாங்கன்னா பதில் அனுப்பக் கூடாது.கேட்டா மெசேஜ் வந்ததை கவனிக்கல பிஸியா இருந்தேன்னு சொல்லிக்கலாம்.
  •  போனை off பண்ணி வச்சுக்கலாம்.அப்புறம் கேட்டால் current இல்லை charge இல்லைன்னு சொல்லிக்கலாம்.
  • மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பீற்றிருந்தால் wait a minute என்று சொல்லிற்று கடுப்பாகிற வரைக்கும் அவங்கள wait பண்ண வைக்கலாம்.
  •  e-மெயில் அனுப்பினாங்கன்னா reply பண்ணாதீங்க.கேட்டால் இன்டர்நெட் வேலை செய்யலன்னு சொல்லிக்கலாம்.
  • Skype இல call பண்ண சொன்னாங்கன்னா headphone சரியில்ல headphone  மாத்தணும்னு சொல்லுங்க.
  • Facebook இல அவங்களை பற்றி status போட்டுக்கலாம்.
  • இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.

கடைசியில அவரோட நிலைமை இப்பிடித்தானே இருக்கும் ?ஹ ஹ ஹ ஹா.....
அப்போ பதிவு போட்டவங்க நிலைமை இதுதானே ?

தண்ணீரின் மருத்துவ குணங்கள்




தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை: 

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?